வவுனியாவில் 46 பேர் கொரோனாவுடன் அடையாளம்!

வவுனியா மாவட்டத்தில் மேலும் 46 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது எனச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் கொரோனாத் தொற்றுக்கு இலக்கானவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளின் முடிவுகள் சில வெளியாகியுள்ளன.

அதற்கமைய வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக 46 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தொற்றாளர்களையும், அவர்களுடன் தொடர்புடையவர்களையும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews