யாழில் கஞ்சா, கசிப்புடன் பெண் கைது!

யாழ்ப்பணம் கோப்பாய் செல்வபுரம் பகுதியில் கஞ்சா மற்றும் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் பொலிஸாரின் விசேட சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
நீண்ட நாட்களாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது குறித்த நபரின் வீட்டில் இருந்து 100 கிராம் கஞ்சாவும் 10 லீற்றர் கசிப்பும் ஒரு தொகை பணமும் மீட்கப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews