சர்வதேசத்தில் சாதித்த சாதனையாளர்களை அழைத்து பாராட்டிய ஜனாதிபதி

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு பதக்கம் வென்ற அகிலத் திருநாயகியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேரில் அழைத்து பாராட்டி மதிப்பளித்தார்.

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, அகிலத்திருநாயகிக்கு நினைவு சின்னம் வழங்கி ஜனாதிபதி வாழ்த்துகளை தெரிவித்துகொண்டார்.

அத்துடன் யாழ்ப்பாணம் தென்மராட்சியை சேர்ந்த இளைஞரான பழுதூக்கல் வீரன் சற்குணராசா புசாந்தனையும் இன்று மாலை அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்…

Recommended For You

About the Author: Editor Elukainews