கட்டைக்காட்டில் வருடத் திருப்பலியில் கலந்துகொண்ட பெருமளவானோர்

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்திமாதா ஆலயத்தில் இன்று வருடத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

இன்று காலை 05.30 மணிக்கு ஆரம்பமான வருடத் திருப்பலியை அருட்தந்தை தயாபரன் ஒப்புக் கொடுத்தார்.

திருப்பலியில் கட்டைக்காடு பங்கு மக்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு இறையாசி வேண்டிச் சென்றனர்.

அத்தோடு அருட்தந்தை தயாபரன் தலைமையில் பங்குமக்கள் முன்னிலையில் கடலும் ஆசிர்வதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews