எதிர்காலத்தில் ரணில் ஜனாதிபதியாகினாலேயே நாடு முன்னோக்கி செல்லும்!டக்ளஸ் தேவானந்தா

தற்போதுள்ள நிலைமையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகினால் மாத்திரமே நாட்டினை முன்னோக்கிகொண்டு செல்ல முடியும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாதெரிவித்தார்

இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது உள்ள நிலைமையில் பலர்ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கலாம் ஆனால் பிரேக் டவுன் வண்டி போன்று இருந்த நாட்டினை ஓரளவிற்கு ஓடக்கூடிய வண்டியாக தற்போதுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாற்றியுள்ளார்

எதிர்காலத்தில் இந்த நாட்டினை றீ கொண்டிசன் வண்டியாக மாற்றும் நிலைமை ஏற்படும் எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகினால் இந்த நாடு முன்னோக்கிச் செல்லும் எனவும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews