உலகத் தமிழர் தேசிய பேரவையால் மட்டக்களப்பு புனானையில் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு…..!

கொரோணா பெரும் தொற்று காரணமாக நாளாந்த பொருளாதாரம் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட 25 குடும்பங்களுக்கு உலகத் தமிழர் தேசியப் பேரவையினரால் உலர் உணவு பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண எல்லை கிராமமான புனானை கிராமத்திலேயே இவ் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வு அதன் கிழக்கு மாகாண செயற்பாட்டாளர்  திரு தமிழ் செல்வன் தலமையில் இடம் பெற்றது. தலா இரண்டாயிரம் பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டமை குறிப்பிட தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews