வடக்கு- கிழக்கு சிவில் சமூக குழுவின் ஏற்பாட்டில் இன்று அரசியல் கலந்துரையாடல்!

வடக்கு- கிழக்கு சிவில் சமூக குழுவின் ஏற்பாட்டில் தந்தை செல்வா கலையரங்கில் இன்று மாலை விசேட  அரசியல் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது,

பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில்

கருத்துரைகளை அரசியல் ஆய்வாளர்களான அ.யதீந்திரா ,நிலாந்தன் மற்றும் பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம் ஆகியோர் வழங்கவுள்ளனர்,

குறித்த அரசியல் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள்,மதகுருமார், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதோடு

இன்றைய நிலையில் தமிழ் தேசியக் கட்சிகள் செய்யவேண்டியது? எனும் தொனிப்பொருளில் குறித்த  கருத்தாடல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews