மின் கண்டனம் அதிகரிப்பின் எதிரொலி, செலுத்த முடியாது திண்டாடும் மக்கள், குப்பி விளக்கு வாழ்க்கை மீண்டும் ஆரம்பம், பலரும் பாதிப்பு….!

மந்திகை மின்சார சபை பொறியியலாளர் பிரிவில் வீடுகளின்  மின்சாரம் துண்டிக்கப்படுவதனால் மக்கள் பெரிதும் பதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது அதிகரித்த மின்சார கட்டணம் காரணமாக மக்கள் தமது மின்சார பாவனை கட்டணத்தை பல மாதங்களாக செலுத்த முடியாத நிலையில் தொடர்ந்தும் மின்சாரம் துண்டிப்புக்கள் மின்சார சபையால் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இதனால் மக்கள் மீண்டும் மண்ணெண்ணெய்  குப்பி விளக்குகளை பயன்படுத்திவருகுன்றனர்.
தற்போது வேலை இல்லாத் திண்டாட்டம், வாழ்வாதாரத்தை ஈட்ட முடியாத பொருளாதார சுமை மூலம் பாதிக்ப்படும் மக்கள் மின்சாரம் இன்றியும் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிட தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews