குழந்தையுடன் சென்ற பெண் விபத்தில் பலி!

தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த 4 வயது குழந்தையும் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ஓட்டனரான பெண் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பள்ளியவத்தை, மஹவெல பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
கவுடுபெலெலல்ல பிரதேசத்தில் கிளை வீதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் பிரதான வீதிக்குள் நுழைய முற்பட்ட போது அனுராதபுரத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் மாத்தளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews