கிளிநொச்சி முரசுமோட்டையில் விபத்து : சாரதி காயம்

கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முரசுமோட்டை பகுதியில் நேற்று இரவு வேகக்கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் அருகில் இருந்த கால்வாயில் பாய்ந்ததில் சாரதி காயமடைந்துள்ளார்.

காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews