மணற்பகுதி புத்தூர் ஸ்ரீ புவனேஸ்வரி அம்பிகை மஹா கும்பாபிஷேக பெருவிழா…!

யாழ்ப்பாணம் மணற்பகுதி புத்தூர் ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் கும்ப அபிடேக பெருவிழா எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் முதலாம் திகதி பிற்பகல் 5.15 தொடக்கம் 6 மணிவரையான சுபவேளையில் கர்மாரம்பம் இடம்பெறவுள்ளது.

மூன்றாம் திகதி காலை 8 மணிமுதல் மாலை நான்கு மணிவரை எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவமும்,  நான்காம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 6.09 மணி தொடக்கம் 7.31 மணிவரையுள்ள சுப மூர்த்தவேளையில் மஹா கும்பாபிஷேக பெருவிழாவும்,

மண்டலாபிஷேகம் நான்காம் திகதி முதல் பதின்நான்காம் திகதி வரை இடம்பெற்று, எதிர்வரும் பதினைந்தாம் திகதி காலை 10 மணிக்கு 109 சங்காபிஷேகமும் விசேட பூஜையும் இடம்பெறும்.
ஒவ்வொரு நாளும் மாலையில் சிறப்பு கலை, பண்பாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews