இந்திய – இலங்கை சட்டவிரோத செயற்பாடு – பின்னணியில் இருந்த மற்றொருவர் கைது!

இந்திய – இலங்கை சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுத வியாபாரம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் தொடர்பில் மற்றொருவரை என்ஐஏ (NIA) கைது செய்துள்ளது.

இது தொடர்பில் தமிழகத்தில் வைத்து லிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வசிப்பவராக கூறப்படும் லிங்கம் என்பவர் மற்றொரு குற்றம் சாட்டப்பட்ட குணசேகரனின் நெருங்கிய கூட்டாளி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்தியாவிலும் இலங்கையிலும் “போதைப்பொருள் மற்றும் ஆயுத வர்த்தகத்தின் வருமானத்தை” மோசடி செய்வது தொடர்பான சட்டவிரோத பரிவர்த்தனைகளுக்கு முக்கிமானவராக செயல்பட்டார்.

குற்றம் சாட்டப்பட்ட லிங்கம், இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதை சட்டப்பூர்வமாக்கும் முயற்சியில் மோசடி உறுப்பினர்களுக்கான போலி அடையாள ஆவணங்களையும் தயாரித்துள்ளார் என்று NIA விசாரணைகளில் தெரியவந்துள்ளது

அதேவேளை இவர்கள், பாகிஸ்தானியரான ஹாஜி சலீம் என்பவரிடம் இருந்து இந்த சட்டவிரோத போதைப்பொருட்களை பெற்றனர் என்பதும் NIA விசாரணையில் தெரியவந்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews