ரஷ்யாவில் இருந்து வந்த 120,000 ஸ்புட்னிக் 4-வீ தடுப்பூசி

ரஷ்யாவின் தயாரிப்பு கோவிட்-19 தடுப்பூசியான ஸ்புட்னிக்- வீ இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

மெஸ்கோவில் இருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் தடுப்பூசிகள் துபாய் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இலங்கை வந்தடைந்த தடுப்பூசியை தொலை வரையறுக்கப்பட்ட இலங்கை மருந்து கூட்டுத்தாபனத்தின் குளிரூட்டி வசதி கொண்ட லொறிகள் மூலம் கொழும்பில் மத்திய மருந்து களஞ்சியத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இலங்கை வந்துள்ள இந்த ஸ்புட்னிக் – வீ. தடுப்பூசி தொகை கண்டி மாவட்டத்தில் முதலாவது தடுப்பூசிய பெற்றுக்கொண்ட மக்களுக்கு இரண்டாவது தடுப்பூசியாக வழங்கப்படவுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews