கசிப்பு மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் இருவர் கைது!

சட்டத்துக்கு புறம்பாக தயாரிக்கப்பட்ட கசிப்பு மற்றும் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று முற்பகல் ஆனைக்கோட்டை மூன்றாம் கட்டை பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து ஆயிரத்து 500 மில்லி லீற்றர் கசிப்பு மற்றும் 21 கிராம் 450 மில்லிகிராம் கஞ்சா கலந்த மாவா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் கூறினர்.
யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர். சந்தேக நபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews