இலங்கை – இந்திய கப்பல் சேவையை மீளவும் ஆரம்பிக்க நடவடிக்கை

இலங்கை – இந்திய கப்பல் சேவையை மீளவும் ஆரம்பிப்பதற்காக தலைமன்னார் இறங்குதுறை புனரமைக்கப்படவுள்ளது.

இந்த இறங்குதுறை 180 கோடி ரூபா செலவில் 37 வருடங்களின் பின்னர் திருத்தியமைக்கப்படவுள்ளது என துறைமுகங்கள்இ கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

புனரமைக்கப்படவுள்ள தலைமன்னார் இறங்குதுறையை அமைச்சர் நிமல் சிறி பால டி சில்வா நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன்போதுஇ நாடாளுமன்ற உறுப்பினர்கள்இ அரச உயர் அதிகாரிகள்இ கடற்படை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.

இங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர்இ இந்திய சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதன் மூலம் வடக்கு அபிவிருத்தியடையும் என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews