யாழ்ப்பாணம்” மலர் 02ற்கான ஆக்கங்களை கோரும் யாழ். மாவட்ட செயலகம்…!

யாழ்ப்பாணம்” மலர் 02ற்கான ஆக்கங்கள் கோரப்படுகின்றன. இது குறித்து யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாண மாவட்டப் பண்பாட்டுப் பேரவையால் நடத்தப்படும் 2023 ஆம் ஆண்டிற்கான மாவட்டப் பண்பாட்டு விழாவில் வெளியீடு செய்யப்படவுள்ள ‘யாழ்ப்பாணம்’ மலர் – 02 இற்கான ஆக்கங்கள் கோரப்படுகின்றன.
“யாழ்ப்பாணத்து மொழிவழக்கும் தமிழிலக்கியமும்” எனும் தொனிப்பொருளை உள்ளடக்கியதாக ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
05 பக்கங்களுக்கு மேற்படாதவாறு A-4 தாளில் கணணியில் தட்டச்சு செய்து ( Font – Baamini, Font Size – 12 ), gajaffna@sitnet.lk எனும் மின்னஞ்சல் ( E.Mail ) முகவரிக்கு மென்பிரதியாகவும் (Soft Copy), அதன் வன்பிரதியை நேரடியாகவோ அல்லது பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஊடாகவோ 2023.08 31 ஆம் திகதிக்கு முன்னர் ‘தலைவர் . யாழ்ப்பாண மாவட்டப் பண்பாட்டுப் பேரவை, மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம் ‘ எனும் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் – என குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews