தீவக வலயத்தில்  மாணவி மீது அதிபர் தாக்குதல் – மறைப்பதற்கு முயற்சி…!

தீவக வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 4ல் கல்வி கற்கும் பெண் மாணவி மீது பாடசாலை அதிபர் தடிகளால் முதுகில் தாக்கியுள்ளார்.

குறித்த சம்பவம் கடந்த  புதன்கிழமை பாடசாலையில் இடம்பெற்றதாக அறியக் கிடைக்கும் நிலையில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் குறித்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என அச்சுறுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் வேலணை பிரதேச செயலரை தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த சம்பவம் தொடர்பில் தமது உத்தியோகத்தர்களுக்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றதாக தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews