கிழக்கு மாகாண காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக மீண்டும் விமல்ராஜ் பதவி ஏற்பு!

கிழக்கு மாகாண காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள எனக்கு பல அச்சுறுத்தல் மத்தியில் எனது கடமையை ஏற்றுக் கொண்டுள்ளேன். இருந்தபோதும் சிலர் அரசியல் லாபங்களுக்காக என் மீது வீன்பழி சுமத்தியவர்களுக்கு இன்றைய நாள் ஒரு பதிலடியான நாள் என கிழக்கு மாகாண காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக மீண்டும் பதவியேற்றுள்ள  விமல்ராஜ் தெரிவித்தார். மட்டக்களப்பு கச்சேரியில் அமைந்துள்ள கிழக்கு மாகாண காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக கடமையாற்றிய விமல்ராஜ் மிது பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக அவரை கடமையில் இருந்து இடைநிறுத்தப்பட்ட நிலையில் அவர் அதற்கு எதிராக மேல் முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து நிலையில் அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு மீண்டும் பதவியை வழங்குமாறு நிதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கமைய தனது கடமையை திங்கட்கிழமை (10) சம்பீரதாய பூர்வமாக கடமையை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 12 வருடங்களக்கு மேலாக காணி சீர்திருத்து ஆணைக்குழுவின் பணிப்பாளராக திருகோணமலை ,முல்லைத்தீவு, கிளிநொச்சி ,மட்டக்களப்பு ,யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் பணியாற்றியுள்ளேன் எனக்கு வழங்கப்பட்ட கடமையை சரியாக இதுவரை செய்துள்ளேன் இருந்தபோதும் பல சொல்லோன துயரங்களை சந்தித்தேன்.

இருந்த போதும் என்கு எதிராக போலியான் பல குற்றச்சாட்டுக்களை சில அரசியல்வாதிகள் தங்களது வரபிரசாரத்தை பயன்படுத்தி குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இவைகள் அனைத்தும் ஒரு பொய்யான குற்றச்சாட்டுக்கள்.

காணிக்கு உறுதி வழங்குவது காணி சட்டங்களை நடைமுறைப்படுத்துவது காணி சீர்திருத்த ஆணைக்குழு அதற்கான ஒரு சட்ட ஆலோசனை பிரிவு உள்ளதுடன் கள உத்தியோகத்தரிடம் தொடங்கி அமைச்சர்வரைக்கும் உள்ள அனைவரது கையொப்பத்துடன் தான்  உறுதி வழங்கப்படும்.

ஊடகவியலாளர் மட்டுமல்ல தனி நபருக்கு எந்த ஒரு காணிவழங்க முடியாது காணி வழங்குவதற்கான சட்டம் இருக்கின்றது. அந்த வகையில்  தமிழ் ஊடகவியலாளர் சங்கம் அரசாங்க அதிபரிடம் தங்களது கோரிக்கையை விடுத்திருந்தனர்.

இந்த கோரிக்கையையடுத்து அரசாங்க அதிபர் விசேடமாக ஊடகவியலாள்களுக்கு காணி வழங்குமாறு என்னிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதனையடுத்து முறையாக காணி கச்சேரி வைத்து அதனை தலைமை காரியாலயத்துக்கு அனுப்பப்பட்டு அங்கு சிபார்சு செய்யப்பட்டு அதனடிப்படையில் காணிகளை ஊடகவியலாளர்களுக்கு வழங்கினோம்.

அதில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் முனைப்பாக செய்யபட்டு வழங்கப்பட்டது இதனை சில அரசியல்வாதிகள் ஊடகவியாலாளர்களுக்கு எந்தவகையில் காணி வழங்கப்பட்டது என தெரிவித்த குற்றச்சாட்டு முழுமையாக பொய்யானது. அதேவேளை வேறு எந்தவொரு ஊடகவியலாளர்களோ சங்கங்களோ காணி தருமாறு கேட்கவில்லை.

எனக்கு எதிராக அரசியல் வாதிகள் முற்று முழுதாக பயன்படுத்தப்பட்டது. எனக்கு எந்த இடத்தில் வீன்பழி சுமத்தி எனது சேவையை இடைநிறுத்தி முடிவுக்கு கொண்டுவந்து அனுப்பினார்களோ அந்த இடத்தில் சேவையாற்ற வேண்டும் என மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கில் சாதகமாக எனக்கு தீர்பளித்து அதற்கமைய மீண்டும் பதவியை பொறுப்பேற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews