வளர்ப்பு பன்றி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஒருவர் படுகாயம்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி முள்ளி இராணுவ சோதனை சாவடி பகுதியில் உள்ள வளர்ப்பு பன்றி ஒன்று மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது மோதியதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
குறித்த சம்பவம்  29/06/2023 பிற்பகல் 6:00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
மணல்காடு கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது பன்றி ஒன்று வேகமாகா வீதியை கடக்கும்போது மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளது. இதனால் நிலை தடுமாறி விபத்துக்கு உள்ளான இளைஞன் வீதியில் வீழ்ந்ததில் காயமடைந்த. நிலையில் வீதியால் சென்றவர்களால் மீட்க்கப்பட்டு பருத்தித்துறை  ஆதார வைத்திய சாலையில்  சேர்க்கப்பட்டுள்ளார்.
விபத்தின் மணல்காட்டை சேர்ந்த 36 வயதுடைய வின்சன் டிபோல் என்பரே காயமடைந்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews