நல்லூரில் சிதறு தேங்காய் அடித்து வழிபாடு நடத்திய முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா… |

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனநல்லூர் கந்தசுவாமி கோவிலில் சிதறுதேங்காய் அடித்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம்(29) காலை  நல்லூர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

சைவ பண்பாட்டுடன் வேட்டி அணிந்து சென்ற மைத்திரிபால சிறிசேன சிதறுதேங்காய் அடித்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன, மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

வழிபாட்டிற்கு பின்னர் ஆலயசூழலில் நின்ற முன்பள்ளி குழந்தைகள், வெளிநாட்டவர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்

Recommended For You

About the Author: Editor Elukainews