2கிலோ கஞ்சாவுடன்பளையில் இருவர் கைது!

2.160கிலோகிராம் கேரளா  கஞ்சாவுடன் இருவர் நேற்று அதிகாலை பளை பகுதியில் சுற்று காவலில் ஈடுபட்ட பொலிசாரினால்  கைது செய்யப்பட்டுள்ளார்,

 பட்டா ரக வாகனம் ஒன்றில் கஞ்சா பொதியினை மறைத்து வைத்திருந்த நிலையில் பொலிசார்  வாகனத்தினை சோதனையிட்டபோதுகஞ்சா பொதி  கைப்பற்றப்பட்டுள்ளது,

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் கடந்த வருட இறுதி பகுதியில்  கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளநிலையில் மீண்டும் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , கைது செய்யப்பட்ட நபர் கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்,

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஏற்கனவே இரண்டு மூன்று தடவைகள் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது எனவும் பொலிசார் தெரிவித்தனர்,

Recommended For You

About the Author: Editor Elukainews