கிழக்கு மாகாண விவசாய நவீனமயமாக்கலில் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் 350 பேருக்கு கிழக்கு ஆளுநர் நீர்ப்பம்பிகள் வழங்கி வைப்பு!

கிழக்கு மாகாணத்தில் விவசாய நடவடிக்கைகளை நவீனமயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டதில் வாழை மற்றும் மாதுளை பழ உற்பத்தியில் ஈடுபடும் 350 விவசாயிகளுக்கு முதற்கட்டமாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் நீர்ப்பம்பிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (10.06.2023) மட்டக்களப்பு, கல்லடி சன்சைன் கிறான்ட் மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமாண். இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்,  பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன்,தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் இணை செயலாளர் பிரசாந்தன், மாகாண பிரதித் திட்டப்பணிப்பாளர் கே.கருணாகரன், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா, மற்றும் பிரதேச செயலாளர்கள் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கிழக்கு மாகாண உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


இதன்போது விவசாயிகள் ஆளுநருக்கு பென்னாடை போத்தி கௌரவித்ததுடன் அறுவடை செய்யப்பட்ட வாழைப்பழத்தை வழங்கிவைத்தனர். இதனைத் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட விவாயிகளுக்கு 350 நீர்ப்பம்பிகள் ஆளுநர் வழங்கிவைத்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews