மட்டக்களப்பு மாங்காட்டில் உணவு நஞ்சானதில் ஒருவர் உயிரிழப்பு 3 பேர் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மாங்காடு பிரதேசத்தில் சமைத்து உண்ட  உணவு நஞ்சாகியதில் 27 வயது யுவதி இன்று வியாழக்கிழமை (8) ஒருவர் உயிரிழந்ததுடன் 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மாங்காட்டு பிரதேசத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான  27 வயதுடைய உயேந்தினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்து பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் சம்பவதினமான இன்று மதிய உணவினை உண்ட பின்னர் சுமார் 2 மணியளவில் இதில் உயிரிழந்த பெண் மற்றும் அவரது 4 மற்றும் 7 வயது இரு குழந்தைகள் அவரது தாயார் உட்பட 4 பேர் வாந்தியெடுத்த நிலையில் மயங்கியதையடுத்து அவர்களை கஞவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் 27 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய 3 பேரும் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews