மட்டக்களப்பில் வீடுகள் உடைத்து திருடும் திருட்டுக் குழுவிற்கு வேவு பார்த்துவந்த இரு இளைஞர்கள் கைது

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள திருகோணமலை வீதியிலுள்ள தனியர் வங்கி ஒன்றிற்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றில் பட்ட பகலில் பூட்டியிருந்த வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்து தொலைக்காட்சி ஒன்றை திருடிச் சென்ற திருடர்களுக்கு வேவு பார்த்து கொடுத்த கொக்குவில் பிரதேசத்சை சேர்ந்த 23 ,24 வயதுடைய இரு இளைஞர்களை திங்கட்கிழமை (5) இரவு கைது செய்துள்ளதாகவும் மோட்டார் சைக்கிள் ஒன்றை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த வாரம் குறித்த பகுயில் பூட்டியிருந்த வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்த எச்.டி. தொலைக்காட்சி ஒன்று திருட்டுபோயுள்ளது இது தொடர்பாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கஜநாயக்கா தலைமையில் விசாரணை இடம்பெற்றுவந்தது

இதற்கமைய திருட்டுப் போன வீட்டிற்கு அருகிலுள்ள வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிரி கமராவை சோதனையிட்டபோது அங்கு அந்த வீடு உடைத்து திருடுவதற்கு முன்னர் இரு இளைஞர்கள் டியோ ரக மோட்டர் சைக்கிள் மற்றும் பல்சர் ரக மோட்டர்சைக்கிளில் அந்த பகுதிக்கு வேறு வேறு ஆடைகளை மாற்றிக் கொண்டு வந்து வேவு பார்துச் சென்ற சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் இரு இளைஞர்கள் சென்று வீட்டை உடைத்து அங்கிருந்த தொலைக்காட்சி பெட்டியை திருடிக் கொண்டு சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து வேவு பார்த்துவந்தவர்களின் மோட்டார் சைக்கிள் இலக்கத்தை பெற்று விசாரணை மேற்கொண்ட பொலிசார் கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த 23, மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களை நேற்று அந்த பகுதியில் வைத்து சந்தேகத்தில் கைது செய்யதுடன் வேவு பார்க்க பயன்படுத்திய டியோ ரக மோட்டர் சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை  இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது இருவரையும் எதிர்வரும் 9ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews