கொழும்பில் பரபரப்பு: தனியார் வைத்தியசாலை ஒன்றில் இருந்து கைக்குண்டு மீட்பு!

கொழும்பு – நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையின் முதலாம் மாடியிலுள்ள கழிப்பறையொன்றிலிருந்தே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கைக்குண்டை பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நாரஹேன்பிட்டி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews