வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்….!

வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக இடம்பெற்றது.

பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளிற்கு சென்று சிக்குண்டுள்ள பெண்களை மீட்டு நாட்டுக்கு அழைத்து வர வேண்டும் என்பதை வலியுறுத்தியும், போலி முகவர்களை இல்லாது செய்தல், வேலைவாய்ப்புக்காக பணிப்பெண்களாக செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை வலியுறுத்தியும் குறித்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் பெண்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews