மட்டக்களப்பு மியான்குளத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை கஞ்சாசெடி மற்றும் உள்ளூர் துப்பாக்கியுடன் 3 பேர் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மியான் குளப்பகுதில் கசிப்பு உற்பத்தி நிலையத்தை இன்று வியாழக்கிழமை (25) முற்றுகையிட்ட பொலிசார் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 3; உள்ளூர் துப்பாக்கி மற்றும் கஞ்சா செடிகளுடன் 3 பேரை கைது செய்ததுடன் 2 பெரல் கோடாவை மீட்டு அழித்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய சம்பவதினமான இன்று மாவட்ட புலனாய்வு பிரிவினர் பொலிசாருடன் இணைந்து குறித்த குளப்பகுதியை முற்றுகையிட்டனர் அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்ததுடன் ஒரு உள்ளூர் தயாரிப்பு துப்பாகி ஒன்று 15 கஞ்சா செடிகள் 2 பெரல் கோடா என்பவற்றை மீட்டனர்.

இதில் மீட்கப்பட்ட 2 பெரல் கோடைவை அந்த பகுதியில் அழித்ததுடன் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews