குடும்பஸ்தர் ஒருர் மீது தாக்குதல் நடத்தி ரிக்ரொக்கில் காணொளி வெளியிட்டவர்களுக்கு விளக்கமறியல்!

குடும்பஸ்தர் ஒருவரை வாளால் வெட்டி அதன் வீடியோவை ஒளிப்பதிவு  பண்ணி சமூக வலைத்தளத்தில் ரிற்ரொக் பதிவிட்ட எட்டு பேரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை பதில் நீதவான் ந.ராஜீவன் இன்று (13) உத்தரவிட்டார்.
இச் சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந் நிலையில் மேற்படி  நபரை வாளால் வெட்டி அதன் ஒளிப்பதிவினை ரிற்ரொக் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டமை தொடர்பில் நெல்லியடி பகுதியில் வைத்து எட்டு பேர் நேற்று  வெள்ளிக்கிழமை (12) இரவு காங்கேசன்துறை புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்ததுடன் வாள், கோடரி என்பவற்றையும் மீட்டனர்.
எட்டு பேரையும் இன்று சனிக்கிழமை(13) பருத்தித்துறை பதில் நீதவான் நடராஜா ரஜீவனின் வாசஸ்தலத்தில் முற்படுத்தப்பட்ட போது எட்டு பேரையும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்க மறியல் வைக்குமாறு உத்தரவு.

Recommended For You

About the Author: Editor Elukainews