ஆனைக்கோட்டையில் கசிப்புடன் இருவர் கைது!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் ஆனைக்கோட்டை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மானிப்பாய் பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அவர்களிடம் இருந்து 6.5 லீட்டர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்கள் இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews