காத்தான்குடியில் ஜஸ்போதை பொருளுடன் 3 பேர் கைது!

காத்தான்குடி பிரதேசத்தில் இரு வெவ்வேறு இடங்களில் 300 மில்லிக்கிராம்  ஜஸ் போதைப் பொருளுடன் 3 பேரை நேற்று புதன்கிழமை (10) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலைய பெரும்குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் சம்பவதினமான நேற்று பகல் காத்தான்குடி பர்ஸான் வீதியில் வைத்து 25 மற்றும் 28 வயதுடைய இருவரை மடக்கிபிடித்து கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 50, மற்றும் 60 மில்லிக்கிராம் ஜஸ்போதை பொருளை மீட்டனர்.

அதேவேளை ரெலிகோம் வீதியில் வைத்து 190 மில்லிக்கிராம் ஜஸ்போதை பொருளுடன் 33 வயதுடைய ஒருவரை கைது செய்தனா.

இவ்வாறு இரு வெவ்வேறு சம்பவங்களில் 300 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் 3 பேரை கைது செய்ததுடன் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews