தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் தாம் அக்கறையாக உள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் தாம் அக்கறையாக உள்ளதாக லண்டன் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் புத்திஜீவிகளுடனான சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வு விடயங்களை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தமிழ் கட்சிகளும் அரசாங்கத்தோடு இணைந்து ஒத்துழைப்புக்களை வழங்க முன்வருவார்கள் என நினைப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

தமிழ் கட்சிகளுடனான சந்திப்பில் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் விரிவாக கலந்துரையாடவுள்ளதாக புத்திஜீவிகள் மத்தியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews