தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் “பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டம்”

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் “பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டம்” இன்றையதினம் யாழ். நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நடைபெற்றது.
இதன்போது யாழ். கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
ரொறன்ரோ மனிதநேயக் குரல் அமைப்பின் தலைவர் திரு.ஆர்.என்.லோகேந்திரம் பிரதம விருந்தினராகவும், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் திரு. ஐங்கரநேசன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்ததுடன், இந்நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
 

Recommended For You

About the Author: Editor Elukainews