மொட்டுக் கட்சியை விட்டு வெளியேறுகிறாரா சரத் வீரசேகர…!

நாட்டைப் பிரிக்கும் நிலை ஏற்பட்டால் மாத்திரமே நான் மொட்டுக் கட்சியை விட்டுச் செல்வேன். அதுவரை இந்தக் கட்சியில்தான் இருப்பேன்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “நான் எப்போதும் மொட்டுக் கட்சிதான். என்னை அம்பாறையில் இருந்து வந்து கொழும்பில் போட்டியிடுமாறு கோட்டாபயதான் அழைத்தார். 3 இலட்சத்து 28 ஆயிரம் வாக்குகளைக் கொழும்பு மக்கள் எனக்கு வழங்கி என்னை வெற்றி பெற வைத்துள்ளனர்.

அதனால்தான் நான் இன்றும் மொட்டுக் கட்சியில் உள்ளேன். மொட்டு கட்சியின் ஆட்சிதான் இப்போதும் தொடர்கின்றது.

தலைமைத்துவத்தில் மாத்திரம்தான் மாற்றம் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews