யாழ். திருநெல்வேலியில் கவனயீர்ப்பு

யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் சைவச் சிறுவர் இல்ல அலுவலகம் மற்றும் விடுதி, மாணவர்களினால் சேதமாக்கப்பட்டமையை கண்டித்து அப்பகுதி மக்கள் மற்றும் பழைய மாணவர்களினால், இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

திருநெல்வேலியில் உள்ள சைவச் சிறுவர் இல்லமானது நீண்ட காலமாக சிறப்பாக செயற்பட்டு வருகின்றது.

எனினும் கடந்த ஒரு வருட காலமாக குறித்த இல்லத்திற்கு முகாமையாளராக தெரிவு செய்யப்பட்ட ஒருவரின் செயற்பாடுகளின் காரணமாக விடுதியில் பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன.

அந்த பிரச்சனைகள் தொடர்ந்த நிலையில், நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதோடு, நீதிமன்ற தீர்ப்பின்படி விடுதியின் முகாமையாளர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து, விடுதி முகாமையாளரின் தூண்டுதலின் பேரில் மாணவர்களினால் விடுதி அலுவலகம் சேதமாக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும், இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறக் கூடாது எனவும் தெரிவித்து, அப்பகுதி மக்களும், சிறுவர் இல்ல பழைய மாணவர்களும் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Recommended For You

About the Author: Editor Elukainews