நெடுந்தீவு வெடியரசன் கோட்டை அருகில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்று போராட்டத்தில் ஈடுபட்டது

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட அக்கட்சியின் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தையடுத்து அப்பகுதியில் பொலிஸாரும் புலனாய்வாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை பௌத்த விகாரையுடன் தொடர்புபடுத்தி கடற்படை அமைத்த பதாகையையடுத்து குழப்பம் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் தொல்லியல் திணைக்களம்,  கடற்படை ஆகியவற்றினரின் செயற்பாட்டை கண்டித்தும் வெடியரசன் கோட்டை தமிழரின் சொத்து என வலியுறுத்தியும் போராட்டம் இடம்பெற்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews