2024 ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அரசு திட்டம்

2024 ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதால் அதற்கு முன் எந்தத் தேர்தலையும் நடத்துவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக அரச உயர்மட்டத்தில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஜனாதிபதி தேர்தலுக்காக இப்போதே தயாராகுமாறு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் பணம் உறுதியாகியுள்ளது. முதலாம் தவணைப் பணமும் கிடைத்துள்ளது. பொருட்களின் விலைகளும் படிப்படியாகக் குறைய ஆரம்பித்துள்ளன. இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி எதிர்வரும் 2024 ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி அதில் தான் வென்று காட்ட ரணில் திட்டம் வகுத்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் பொதுவேட்பாளராகக் களமிறங்குவதே ரணிலின் தீர்மானமாக உள்ளது எனவும் அரச உயர்மட்டத்தில் தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews