IMFஇற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி

விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் சபை நேற்று அனுமதி வழங்கியதை அடுத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
‘விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கையின் வேலைத்திட்டத்தை அங்கீகரித்தமைக்காக சர்வதேச நாணய நிதியத்திற்கு நான் நன்றி கூறுகின்றேன். நிலையான கடன் நிலைகள் மற்றும் எமது சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை அடைவதற்கான எமது முயற்சிகளில் முழு வெளிப்படைத்தன்மைக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்த நோக்கத்தை அடைவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் மிகவும் முக்கியமானது’ என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews