நீதிபதிகளின் சம்பளத்துக்கு அறிவிடப்படும் வரியை இரத்துச் செய்யும் மனு மீதான விசாரணை 22 ஆம் திகதி!

நீதிபதிகளின் சம்பளத்துக்கு அறிவிடப்படும் வரியை இரத்துச் செய்யுமாறு  உத்தரவை பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு ரிட் மனுக்களை, ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில்  எதிர்வரும்  22 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள  மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அதுவரை, நீதிபதிகளின் சம்பளத்திலிருந்து உரிய வரியை வசூலிக்க   விதிக்கப்பட்ட தடை உத்தரவை அன்றைய தினம் வரை நீடித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம் மற்றும் இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் ஆகியவை இந்த  மனுக்களை சமர்ப்பித்துள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews