இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட சம்மேளன இறுதிப்போட்டி

இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தேசிய மட்ட பிரிவு இரண்டு 20 வயதுப்பிரிவு ஆண்களுக்கான இறுதிப்போட்டி கிளிநொச்சி வட்டக்கச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் குருநாகல் மலியதேவ மாதிரிப்பாடசாலை அணியும் கிளிநொச்சி வட்டக்கச்சி மத்திய கல்லூரி அணியும் மோதின.

போட்டியில் வட்டக்கச்சி மத்திய கல்லூரி அணி ஒன்றுக்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் குருநாகல் அணியை வீழ்த்தி சம்பியனாக தெரிவாகியது.

குறித்த போட்டியில் சிறந்த பந்து காப்பாளராக குருநாகல் அணியின் வீரனெவ தெரிவு செய்யப்பட்டதுடன், சிறந்த வீரராக வட்டக்கச்சி மத்திய கல்லூரி வீரர் எஸ்.சுதர்சன் தெரிவு செய்யப்பட்டார்.

விளையாட்டு நிகழ்வில் இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் பண்டார லீலாரத்ன கலந்து கொண்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews