கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் நாடளாவிய ரீதியில் 739 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 70 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் இதுவரை கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 64,647 ஆக உயர்வடைந்துள்ளது.