மிகப்பெரிய பயணிகள் சொகுசுக் கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது!

சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பிரின்சஸ் குரூஸ் என்ற சொகுசு பயணிகள் கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது.

இன்று அதிகாலை, 1,894 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 906 பணியாளர்களை ஏற்றிய இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் 159 சுற்றுலாப் பயணிகள் கொழும்பு துறைமுகத்தில் இறங்கியுள்ளதுடன், இவர்கள் கண்டி, பின்னவல, நீர்கொழும்பு மற்றும் இங்கிரிய ஆகிய பகுதிகளுக்குச் செல்லவுள்ளனர்.

அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமான 294 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பல் தாய்லாந்தில் இருந்து வந்துள்ளதாகவும், இன்றிரவு துபாய்க்கு புறப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews