யாழ் மாநகராட்சி மன்றத்தில் மின் தகனம் செய்ய 8 ம் திகதிவரை பதிவு, மேலுமொரு மின்தகன மயானம் அமைத்துத்தருமாறு முதல்வர் கோரிக்கை….!

கோவிட் தொற்றுக்குள்ளாகி இறப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு யாழ் மாநகர சபையினால் 6500 ரூபா கட்டணம் அறிவிடப்படுவதாகவும்,  குறித்த கட்டணத்தை செலுத்த முடியாதவர்கள் யாரவது தனிப்பட்ட முறையில் தன்னை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தன்னால் உதவ முடியும் எனவும் யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது அண்மைக்காலமாக கொரோணா  தொற்றுக்குள்ளாகி மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது. யாழ் மாவட்டத்தை பொறுத்தவரையில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் அமைந்துள்ள மின் தகன மயானத்திலேயே  அடக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த மயானம் யாழ் மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்டது. குறித்த மயானத்தில் நாளொன்றுக்கு 5 உடல்கள் மட்டுமே தகனம் செய்ய முடியும் என்றும் எதிர்வரும் 8ம் திகதிவரை சடலங்களை எரிப்பதற்கான முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இதனால் வைத்தியசாலையில் அதிகளவிலான சடலங்கள் தேங்கிகாணப்படுவதாகவும் தெரிவித்த மாநகர முதல்வர் அதையும் மீறி நாங்கள் ஒன்று இரெண்டு சடலங்களை கூடுதலாக ஏரியூட்டும் போது குறித்த ஏரியூட்டி அடிக்கடி பழுதடைந்த சந்தர்ப்பங்கள் ஏற்பட்டதாகவும், தற்போதைய சூழலில் அதிகமான சடலங்களை எரியூட்ட வேண்டி தேவை அதிரித்துள்ளதாகவும், இதனால் இன்னுமொரு ஏரியூட்டியை வழங்குமாறு நாம் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்த முதல்வர் குறித்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் நாளொன்றுக்கு அதிகளவிலான சடலங்களை ஏரியூட்டமுடியும் என்றும் யாழ் மாநகர சபைக்கு எரியூட்டி வழங்கப்படாவிட்டாலும் வேறு ஒரு மாயணத்துக்காவது வழங்குங்கள் என்றும், ஏனெனில் கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களை தகனம் செய்ய தற்பொழுது ஒரே ஒரு இடம்தான் உள்ளது. இப்போதுள்ள நிலமையில் இது போதாது என்றும் முதல்வர் தெரிவித்தார்

Recommended For You

About the Author: Editor Elukainews