பொது விளையாட்டு மைதானக் காணியைக் கோரி பொத்துவிலில் போராட்டம்.

அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் உள்ள இளைஞர்கள் தமக்கான பொது விளையாட்டு மைதானம் ஒன்றினை அமைப்பதற்கான காணியை வழங்குமாறு கோரி பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு முன்பாக 08.03.2023 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்பாட்டமானது பொத்துவில் சுயாதீன இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள், பொத்துவில் பிரதேசத்திற்கான பொது விளையாட்டு மைதானம் ஒன்றினை அமைத்துக் கொள்வதற்கான காணியை வழங்குமாறு பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்து, சத்தியாகிரக போராட்டத்திலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews