வவுனியாவில் சோகம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர், வீட்டில் சடலமாக மீட்பு

வவுனியா – குட்செட்வீதி, உள்ளக வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள். பொலிசாரால் இன்று மீட்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

இன்றையதினம் குறித்த வீட்டின் உரிமையாளருக்கு அவரது நண்பர் ஒருவர் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார்.
எனினும் அவர் பதிலளிக்கவில்லை. இதனையடுத்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்போது குறித்த வீட்டினுள் குடும்பஸ்தர் அவரது சிறு வயதான இரு பிள்ளைகள், மனைவி ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தமை கண்டுதிர்ச்சியடைந்து சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த 42 வயதுடைய சிவபாதசுந்தரம் கௌசிகன், வீட்டின் விறாந்தை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன், அவரது மனைவியான 36 வயதுடைய வரதராயினி, இரு பிள்ளைகளான 9 வயதுடைய மைத்ரா, 3 வயதுடைய கேசரா ஆகியோர் உறங்கியபடியும் சடலமாக மீட்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவரும் வவுனியா பொலிசார் மீட்கப்பட்ட சடலங்களை சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர். குறித்த சம்பவம் வவுனியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews