யாழ்.அச்சுவேலி வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் பொலிஸாரால் கைது! மேலும் சிலரை தேடுகிறது பொலிஸ்… |

யாழ்.அச்சுவேலி நகரில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் இருவர் அச்சுவேலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இரு வாள்வெட்டு குழுக்களுக்கிடையில் இருந்துவரும் முறுகல் காரணமாக அச்சுவேலி – மகிழடி வைரவர் கோவிலடியில் நேற்று மாலை இளைஞன் ஒருவன் மீது துரத்தி.. துரத்தி.. வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் பாரதி வீதி பத்தமேனியை சேர்ந்த 27 வயதான இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்த அச்சுவேலி பொலிஸார். சந்தேகத்தினடிப்படையில் குட்டியப்புலம் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்துள்ளதாக கூறியுள்ள அச்சுவேலி பொலிஸார்

மேலும் சிலரை தேடிவருவதாக கூறியுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews