அனலைதீவில் மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது….!

அனைலதீவு பாலத்திலிருந்து ஊர்காவற்துறை கண்ணகை  அம்மன் பாலம் ஊடாக இன்றைய தினம் 05.03.2023 ஞாயிற்க் கிழமை காலை 8:00 மணியளவில் கடத்தவிருந்த சட்டவிரோதமான ஒரு தொகை மாட்டிறைச்சியையும்,  அதனை கடத்தி வந்த நபரையும் அனலைதீவில் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிசார்  கைது செய்துள்ளனர்.
இக் குற்றச் செயலுடன் தொடர்புடைய சந்தேக நபர்  யாழ்- மாதகல் என்னும் இடத்தைச் சேர்ந்தவர் என்றும்.  இவருக்கு அனைலைதீவில் கிராம சேவகர்  பதிவு இல்லை என்றும் அவ் ஊர் மக்கள் தெரிவிப்பதோடு இந்த சந்தேக நபர் பல குற்றச் செயல்களுடன்  தொடர்புடையவர் என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேலதிக  விசாரணைகளை ஊர்காற்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews