காத்தான்குடியில் ஜஸ் போதை பொருள் மற்றும் கஞ்சாவுடன் இருவர் கைது

காத்தான்குடி பிரதேசத்தில் ஜஸ் போதைப்பொருள் மற்றும் கஞடசாவுடன் இருவரை நேற்று வியாழக்கிழமை (2) இரவு கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பொவிஸ் மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் காத்தாகன்குடி பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவதினமான நேற்று இரவு காத்தான்குடி கர்ப்பலா பிரதேசத்தில் வைத்து 45 வயதுடைய ஒருவரை 60 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்தனர்

இதேவேளை மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவினர் 42 வயதுடைய ஒருவரை 2.60 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட இருவரையம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews