கைத்துப்பாக்கியுடன் பயணித்தவர் கைது!

கைத்துப்பாக்கியை மறைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளிலில் பயணித்த நபர் ஒருவர் துப்பாக்கியுடன் சந்தேகத்தின் பேரில் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிராண்ட்பாஸ் பண்டாரநாயக்க மாவத்தை சந்தியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் இவரைக் கைது செய்தார்.
சந்தேக நபரின் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கம்பஹா யக்கல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews