அம்பாறை சொறிகல்முனையில் காணாமல் போயுள்ள 13 வயது சிறுவன் மீட்பு

அம்பாறை சவளக்கடை பொலிஸ் பிரிவிலுள்ள  சொறிக்கல்முனை பிரதேசத்தைச் சோந் 13 வயது சிறுவன் ஒருவன் ஞாயிற்றுக்கிழமை காணாமல் போயுள்ள நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (28) அவரது தாயிடமிருந்து மீட்டுள்ளதாக சவளக்கடை பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சிறுவனின் தாயாரும் தந்தையாரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்துவரும் நிலையில் தந்தையுடன் இருந்த சிறுவனை கடந்த ஞாயிற்றுக்கிழமை  வீரமுனையில் மரணவீட்டிற்கு அழைத்துச் சென்ற நிலையில 13 வயதுடைய தீபன் சயான் என்ற சிறுவன் காணாமல் போயிருந்தான்.

குறித்த சிறுவன் மரணவீட்டில் இருந்து தந்தையாருக்கு தெரியாமல் அவனது நண்பனின் உதவியுடன் வவுணதீவு கொத்தியாவலை பிரதேசத்திலுள்ள தாயாரை தேடி சென்று அங்கு இருந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து சிறுவனை இன்று செவ்வாய்க்கிழமை மீட்டு பொலிஸ் நிலையத்தில் வைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

லிசார் அவரது தாயார் இருக்குமிடத்திற்கு சென்ற நிலையில் அவரது தாயார் சிறுவனை  போயுள்ளதையடுத்து சிறுவனை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாணையில் தெரியவந்துள்ளது

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews