துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் பலி

மினுவாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பில்லவத்தை ஆடியம்பலம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு மினுவாங்கொடை, பொரகொடவத்த பிரதேசத்தில் கொல்லப்பட்ட நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது மறைந்திருந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இன்றைய தினம் உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனையும் நடத்தப்பட உள்ளது.

கொலையைச் செய்த சந்தேகநபர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews